என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சோதனை சாவடியில் எஸ்.பி. கிருஷ்ணராஜ் ஆய்வு செய்த காட்சி.
    X
    சோதனை சாவடியில் எஸ்.பி. கிருஷ்ணராஜ் ஆய்வு செய்த காட்சி.

    புளியரை சோதனை சாவடியை எஸ்.பி. கிருஷ்ணராஜ் ஆய்வு

    புளியரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள சோதனைச் சாவடியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
    தென்காசி:

    தென்காசி மாவட்டம், புளியரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள சோதனைச் சாவடியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் நேரில் சென்று ஆய்வு செய்தார். 

    அப்போது தமிழகத்தில் இருந்து கேரள மாநிலத்திற்கோ அல்லது கேரள மாநிலத்திலிருந்து தமிழகத்திற்கோ தேவையற்ற பொருட்களை கொண்டு வருதல் தடுக்கப்படுகின்றதா எனவும், கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தமிழகத்திற்கு வராமல் தடுக்க பிரத்யேகமாக அமைக்கப்பட்ட கொரோனா சோதனை சாவடி பாதுகாப்பான முறையில் அனைவரையும் சோதனை செய்த பின்னரே தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுகிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்தார்.

    மேலும் சோதனை சாவடியில் பணிபுரியும் காவலர்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்து பாதுகாப்பான முறையில் பணி மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் அறிவுரை வழங்கினார்.
    Next Story
    ×