என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கிணற்றில் மூழ்கி தொழிலாளி பலி
Byமாலை மலர்17 Jan 2022 8:53 AM GMT (Updated: 17 Jan 2022 8:53 AM GMT)
குடியாத்தம் அருகே கிணற்றில் மூழ்கி தொழிலாளி இறந்தார்.
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த பி.கே.கேபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிஷோர் குமார் (வயது32) தச்சு வேலை செய்து வந்தார்.
கிஷோர் குமாரின் பாட்டி வீடு குடியாத்தம் அடுத்த வீரிசெட்டிபல்லி கிராமத்தில் உள்ளது. பொங்கல் பண்டிகைக்காக கிஷோர் குமார் தனது பாட்டி ஊருக்கு குடும்பத்துடன் வந்தார்.
நேற்று உறவினர்களுடன் அதே பகுதியில் உள்ள சுமார் 60 அடி ஆழமுள்ள கிணற்றில் குளித்துக் கொண்டிருந்த போது கிஷோர்குமார் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கினார்.
உடன் குளித்துக் கொண்டிருந்த உறவினர்கள் உடனடியாக குடியாத்தம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த குடியாத்தம் தீயணைப்பு நிலைய வீரர்கள் 1 மணி நேரம் போராடி கிஷோர் குமாரை பிணத்தை மீட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பரதராமி போலீசார் கிஷோர் குமாரின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்துபோன கிஷோர் குமாருக்கு மனைவி, 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X