search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    பேரூராட்சி அலுவலகம் முன்பு பொதுமக்கள் தர்ணா

    போளூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு குடிநீர் கேட்டு பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
    போளூர்:

    போளூர் அடுத்த 11வது வார்டு தானே பெருமாள் தெருவில் உள்ள பொது குழாய் தண்ணீர் தொட்டி தொடர்பைத் துண்டிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து பொதுமக்கள் கேட்டபோது இன்னும் 2 நாட்களில் சரி செய்து விடுகிறோம் என்று பேரூராட்சி செயல் அலுவலர் கூறினார். ஆனால் 15 நாட்கள் ஆகியும் அந்த தெருவில் குடிநீர் இணைப்பு பொதுக்குழாயை சரிசெய்யவில்லை. இதனால் 50 மேற்பட்ட பொதுமக்கள் காலி குடத்துடன் பேரூராட்சி அலுவலகம் முன் சுமார் ஒரு மணி நேரம் தர்ணாவில் ஈடுபட்டனர்.

    பின்னர் போலீஸ் நிலையம் சென்று புகார் மனு ஒன்றை பொதுமக்கள் சார்பாக அளித்தனர். இதனால் பேரூராட்சி அலுவலகம் முன் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×