என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

X
கோப்புபடம்
திருப்பூர் மாவட்டத்தில் விடுபட்ட 52 ஆயிரத்து 354 பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு
By
மாலை மலர்16 Jan 2022 8:05 AM GMT (Updated: 16 Jan 2022 8:05 AM GMT)

விடுபட்டவர்களுக்கு, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க, நாளை ரேஷன் கடைகள் செயல்படுமென, கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது.
திருப்பூர்:
தமிழக அரசு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 21 பொருட்கள் அடங்கிய, பொங்கல் பரிசு தொகுப்பு 4-ம் தேதி முதல், ரேஷன் கடைகளில் வழங்கப்படுகிறது. அனைத்து வகை அரிசி பெறும் ரேஷன் கார்டுதாரர்களும், பொங்கல் பரிசு தொகுப்பை பெற்று வருகின்றனர்.
பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக, தமிழகத்தில், 92.74 சதவீதம் பயனாளிகள், பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுள்ளனர். மீதியுள்ள நபர்கள், பொங்கல் பரிசு பெற வசதியாக, நாளை (17ம் தேதி) ரேஷன் கடைகள் வழக்கம் போல்செயல்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
திருப்பூர் மாவட்ட அளவில், 52 ஆயிரத்து, 354 பயனாளிகளுக்கு, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட வேண்டியுள்ளது. நிலுவையில் உள்ள, ரேஷன் கார்டுதாரர்களுக்கு, பரிசு தொகுப்பு வழங்க வசதியாக, 17ம் தேதி (நாளை) ரேஷன் கடைகள் திறந்திருக்கும். பொதுமக்கள் வசதிக்காக, காலை, 7:00 மணி முதல் கடைகள் செயல்படும். பொங்கல் பரிசு தொகுப்பு பெறாமல் விடுபட்டவர்கள், பெற்று கொள்ளலாம்.
இவ்வாறு, அவர்கள் தெவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
