என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    வேலூர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுக்கு கொரோனா

    வேலூர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
    வேலூர்:

    வேலூர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக இருப்பவர் ஆல்பர்ட் ஜான். கேரள மாநிலத்தை சேர்ந்த இவர் கடந்த வாரம் தனது சொந்த ஊருக்கு சென்று வந்தார். 

    இதையடுத்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆல்பர்ட் ஜான் மனைவிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. ஆல்பர்ட் ஜான் மற்றும் அவரது மனைவி வாழப்பாடியில் உள்ள குடியிருப்பு தனிமைப் படுத்திக் கொண்டனர். 

    இந்த நிலையில் ஆல்பர்ட் ஜானுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 

    பரிசோதனை முடிவில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. 

    வேலூர் மாவட்டத்தில் பணிபுரியும் போலீசார் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு கொரோனா பரவி வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×