search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    குமரியில் அனுமதியின்றி திருட்டு மது விற்ற 39 பேர் கைது

    கன்னியாகுமரியில் அனுமதியின்றி திருட்டு மது விற்ற 39 பேர் கைது செய்யப்பட்டனர்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா புகையிலை விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறார்கள்.
    அனுமதியின்றி திருட்டு மது விற்பனை செய்பவர் களையும் போலீசார் கைது செய்து வருகிறார்கள். திருவள்ளுவர் தினமான நேற்று டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தது.

    இதையடுத்து அனுமதியின்றி மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.

    சுசீந்திரம், அக்கரை பகுதியில் அனுமதியின்றி மது விற்ற சிவராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 8 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர். குலசேகரம் பகுதியில் அனுமதியின்றி மதுவிற்ற நாகராஜனை போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல் அஞ்சுகிராமம், ஆரல்வாய்மொழி தக்கலை,  இரணியல், குளச்சல், நாகர்கோவில் பகுதிகளில் மது விற்பனை செய்தவர்களை போலீசார் கைது செய்தனர்.

    மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 39 வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. 555 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர்.
    கோட்டார் சப்- இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார் இடலாக்குடியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது வட்டவிளையைச் சேர்ந்த தனுஷ் என்பவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    இதேபோல் ரெயில்வே ரோடு பகுதியில் ரோந்து சென்றபோது அங்கு கஞ்சா வைத்திருந்த வெள்ளிச் சந்தையைச்  சேர்ந்த அர்ஜுன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    குளச்சல் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை விற்பனை செய்வதாக ஜெகநாதன் என்பவர் மீதும் ஜான் பிரபாகர் என்பவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    Next Story
    ×