என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சங்கராபரணி ஆற்றில் மணல் கடத்திய 3 பேர் கைது
Byமாலை மலர்16 Jan 2022 4:34 AM GMT (Updated: 16 Jan 2022 4:34 AM GMT)
திருக்கனூர் அருகே சங்கராபரணி ஆற்றில் மாட்டு வண்டிமூலம் மணல் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:
திருக்கனூர் அருகே கொடாத்தூரில் சங்கராபரணி ஆறு உள்ளது. இந்த ஆற்றின் கரையோரத்தை சேதப்படுத்தி மாட்டு வண்டி மூலம் மணல் கடத்தப்படுவதாக திருக்கனூர் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர்கள் குமார், வேலு, உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஜார்லேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அப்போது அங்குள்ள ஆற்றில் இருந்து மணலை திருடி மாட்டு வண்டியில் கடத்தி வந்த 3 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் தமிழக பகுதியான வி.நெற்குணம் புதுகாலனி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வெங்கடபதி (வயது 32), முட்றாம்பட்டு காலனியை சேர்ந்த அய்யனார் (45), கடலூர் உச்சிமேடு சாலை தெருவை சேர்ந்த தேவநாதன் (35) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X