என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராஜ்குமார்
    X
    ராஜ்குமார்

    விடுதலைச்சிறுத்தைகள் கட்சி பிரமுகர் உயிரோடு எரித்துக்கொலை

    விடுதலைச்சிறுத்தைகள் கட்சி பிரமுகர் எரித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகை:

    நாகை மாவட்டம் பாப்பாக்கோவில் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 38). இவருடைய மனைவி அனுசியா(36). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் பாப்பாக்கோவில் கிளை செயலாளராக இருந்து வந்த ராஜ்குமார் நேற்று முன்தினம் அதிகாலை அவரது வீட்டு வாசலில் உடல் எரிந்த நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இதை பார்த்த அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ராஜ்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையே ராஜ்குமார் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதை தொடா்ந்து அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையில், ராஜ்குமார் எரித்துக்கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதுதொடர்பாக 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×