என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    போலீஸ் நிலையம் அருகே லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது

    அரியாங்குப்பம் போலீஸ் நிலையம் அருகே லாட்டரி சீட்டு விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    புதுச்சேரி:

    அரியாங்குப்பம் போலீஸ் நிலையம் அருகில் உள்ள திருமணம் மண்டபம் பகுதியில் தடை செய்யப்பட்ட  லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக அரியாங்குப்பம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதனடிப்படையில் நேற்று போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் அப்பகுதியில் கண்காணித்தனர்.  அப்போது அங்கு சந்தேகப்படும்படி 2 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து போலீசார் சோதனை நடத்திய போது அவர்கள் 3  நம்பர் லாட்டரி சீட்டுகள் வைத்திருந்தனர். 

    இதைத்தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் முருங்கப்பாக்கம், அங்காளம்மன் கோவில் வீதியை சேர்ந்த முருகன் (வயது 52),  உருளையன்பேட்டை,  ஒத்தவாடை தெருவை சேர்ந்த ராஜாராம் (56)  என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.3,500 ரொக்க பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×