என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
பேக்கரி கடை ஊழியர் நண்பரின் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை
பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்ல முடியாத வேதனையில் பேக்கரி கடை ஊழியர் நண்பர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு காந்தி நகரை சேர்ந்தவர் கருணாநிதி. இவரது மகன் அஸ்வின் (வயது 21). இவர் புதுவையில் தங்கி இந்திராகாந்தி சிலை சதுக்கம் அருகே உள்ள ஒரு தனியார் பேக்கரியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
இவர் பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட திட்டமிட்டு இருந்தார். ஆனால் திடீரென அதற்கான சூழல் ஏற்படவில்லை என தெரிகிறது. இதனால் அஸ்வின் மன வருத்தத்தில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று தன்னுடன் வேலை பார்க்கும் திருக்கனூர் அருகே உள்ள கூனிச்சம்பட்டு சீனிவாசா நகரில் உள்ள ராஜகுரு (23) என்பவர் வீட்டுக்கு அஸ்வின் சென்றார். அங்கு திடீரென வீட்டின் தனி அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை செய்வதற்கு முன்பு அஸ்வின் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்தார். அதில், எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்ல முடியாத வேதனையில் தற்கொலை செய்து கொள்வதாக அதில் குறிப்பிட்டு இருந்தார்.
இதுகுறித்து அவரது நண்பர் ராஜகுரு கொடுத்த புகாரின் பேரில் திருக்கனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அஸ்வின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story