search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    வேலூரில் இன்று 340 பேருக்கு கொரோனா

    வேலூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 340 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை 54,392 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 50,162 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 1,150 பேர் பலியானார்கள். தற்போது 2,080 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

    இன்று 340 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று 287 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 2 பேர் பலியானார்கள். ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை உள்ளவர்களில் இதுவரை யாருக்கும் ஆக்சிஜன் தேவைப்படவில்லை.

    மேலும் கூடுதலாக படுக்கை வசதிகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

    வேலூர் மாவட்டத்தில் கொரோனா சமூக பரவலாக பரவத் தொடங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் கூட்டமாக கூட வேண்டாம்.முடிந்த அளவு வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.

    தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×