என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வாடகைக்கு வீடு கிடைக்காததால் பெண் தற்கொலை
Byமாலை மலர்15 Jan 2022 8:23 AM GMT (Updated: 15 Jan 2022 8:23 AM GMT)
குடியாத்தம் அருகே வாடகைக்கு வீடு கிடைக்காத விரக்தியில் பெண் தற்கொலை செய்துகொன்டார்.
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர் பேட்டை என்.எஸ்.கே நகர் சன்னதி தோப்பு 2-வது தெருவை சேர்ந்தவர் ஜெயராமன் கூலித்தொழிலாளி இவரது மனைவி பவுனம்மாள் (வயது 60) இவர்களுக்கு ஒரு மகள் திருமணமாகி கணவருடன் அதே பகுதியில் வசித்து வருகிறார்.
இவர்கள் குடியிருந்த வீடு ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டதால் அதனை விரைவில் இடிக்க உள்ளனர்.
இதனால் பல இடங்களில் வாடகைக்கு வீடு தேடினர். எங்கும் வீடு கிடைக்காததால் விரக்தி அடைந்த பவுனம்மாள் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டருகே தெருவில் நின்று உடலில் மண்எண்ணைய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
பவுனம்மாள் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். அவரை மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்து வமனைக்கும், மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பவுனம்மாள் பரிதாபமாக இறந்தார்.
குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X