search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்.
    X
    கோப்புப்படம்.

    அரசு பஸ் மோதி வியாபாரி பலி

    அரசு பஸ் மோதிய விபத்தில் வியாபாரி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    ஈரோடு:

    அரசு பஸ் மோதிய விபத்தில் வியாபாரி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சின்னசாமி ஆசிரியர் வீதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 65). இவரது மனைவி சண்முகா.  

    கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஆறுமுகம் மனைவியை பிரிந்து கடந்த 40 வருடமாக  ஈரோடு மாநகராட்சிக்குபட்ட மாணிக்கம் பாளையம் பகுதியில் பொரி வியாபாரம் செய்து வந்தார். 

    இந்நிலையில் சம்பவத்தன்று ஆறுமுகம் வேலை விஷயமாக சூளை பஸ் நிறுத்தம் வந்தார். பின்னர் அங்குள்ள சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த அரசு பஸ் ஒன்று எதிர்பாராத விதமாக ஆறுமுகம் மீது மோதியது. 

    இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ஆறுமுகம் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×