என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அரசு பஸ் மோதி வியாபாரி பலி
Byமாலை மலர்13 Jan 2022 9:50 AM GMT (Updated: 13 Jan 2022 9:50 AM GMT)
அரசு பஸ் மோதிய விபத்தில் வியாபாரி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு:
அரசு பஸ் மோதிய விபத்தில் வியாபாரி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சின்னசாமி ஆசிரியர் வீதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 65). இவரது மனைவி சண்முகா.
கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஆறுமுகம் மனைவியை பிரிந்து கடந்த 40 வருடமாக ஈரோடு மாநகராட்சிக்குபட்ட மாணிக்கம் பாளையம் பகுதியில் பொரி வியாபாரம் செய்து வந்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று ஆறுமுகம் வேலை விஷயமாக சூளை பஸ் நிறுத்தம் வந்தார். பின்னர் அங்குள்ள சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த அரசு பஸ் ஒன்று எதிர்பாராத விதமாக ஆறுமுகம் மீது மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ஆறுமுகம் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X