search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்.
    X
    கோப்புப்படம்.

    வெறிச்சோடிய சீர்காழி, கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள்

    ஒருநாள் விடுப்பு போராட்டத்தால் சீர்காழி, கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் வெறிச்சோடியது.
    சீர்காழி:

    கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்கிழமை நடந்த ஒருநாள் 
    விடுப்பு போராட்டத்தினால் சீர்காழி, கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் வெறிசோடி காணப்பட்டத்துடன், அன்றாட மக்கள் 
    பணிகள் பாதிப்படைந்தன.

    தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள முன்னாள் மாநில 
    தலைவர் சுப்பிரமணியத்தின் பணி நீக்கத்தை ரத்து செய்து 
    ஆணை வழங்கவும், 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் 
    தமிழ்நாடு ஊரக வளர்ச்சி அலுவலர்கள் சங்கம் சார்பில்தமிழகம் 
    முழுவதும் 1நாள் விடுப்பு போராட்டம் நடந்தது.

    அதன்படி சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இப்போராட்டத்தில் பங்கேற்று ஒன்றிய ஆணையர், வட்டாரவளர்ச்சி அலுவலர், 9 துணை 
    வட்டார வளர்ச்சி அலுவலர்கள், 5 ஓவர்சியர்கள், செயலர்கள்17, 
    கணினி பணியாளர் 4, உதவியாளர்கள் 10 பேர் உள்ளிட்ட மொத்தம் 
    47 பேர் இப்போராட்டத்தில் பங்கேற்று விடுப்பு எடுத்தனர்.

    இதனால் சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அலுவலர்கள் 
    யாரும் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் 
    ஊராட்சிகளில் நடைபெறும் அன்றாட மக்கள் நல பணிகள் 
    பெரிதும் பாதிக்கப்பட்டன. 

    இதேபோல் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மற்றும் 
    ஊழியர்கள் ஒரு நாள் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கொள்ளிடம் ஊராட்சி அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் வட்டார 
    வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், 
    பணி மேற்பார்வையாளர்கள் ஒன்றிய பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள் மற்றும் 42 ஊராட்சிகளை சேர்ந்த 
    ஊராட்சி செயலர்கள் உள்ளிட்ட 83 பேர் பணிக்கு வராமல் 
    ஒரு நாள் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற 
    வேண்டிய அனைத்து பணிகளும் நடைபெறவில்லை. மகாத்மா 
    காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலைக்கு 
    செல்லும் பணியாளர்களும் வேலைக்கு செல்லவில்லை.
    Next Story
    ×