என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பயிர் கடன் தள்ளுபடியில் முறைகேடு
Byமாலை மலர்12 Jan 2022 7:11 AM GMT (Updated: 12 Jan 2022 7:11 AM GMT)
கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிர் கடன் தள்ளுபடியில் ரூ.1 கோடி முறைகேடு நடைபெற்றது தொடர்பாக நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை சூர்யா நகர் பகுதியைச் சேர்ந்த விவசாய சங்க பிரதிநிதி சரவணன் தலைமையில் விவசாயிகள்திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
அதில் கூறப்பட்டிருப்பதாவது:-
தண்டராம்பட்டு தாலுகாவில் ராதாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் ஒரே நபருக்கு எண் மாற்றம் செய்தும், ஒன்றுக்கு மேற்பட்ட கடன் பெறும் தகுதியை மீறி கடன் வழங்கி முறைகேடுகள் மற்றும் கையாடல் நடைபெற்றுள்ளது.
மேலும் இந்த கூட்டுறவு சங்கத்தில் ஏற்கனவே பயிர் கடன் தள்ளுபடி செய்ததில் ரூ.1கோடி அளவிற்கு ஊழல் நடந்துள்ளது.எனவே இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு இச்சங்கத்தில் நடைபெறும் முறைகேடுகளை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் திருவண்ணா மலை மண்டல இணைப் பதிவாளர் ராஜ்குமாரிடம் கேட்டபோது, இச்சங்கத்தில் முறைகேடுகள் எதுவும் நடைபெற்று உள்ளதா? என்பது குறித்து விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட்டு முறையான விசாரணை நடத்தப்படும் என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X