search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறப்பு அலங்காரத்தில் தாடாளன் பெருமாள்-  லோகநாயகி தாயார், ஆண்டாள் சுவாமிகள்.
    X
    சிறப்பு அலங்காரத்தில் தாடாளன் பெருமாள்- லோகநாயகி தாயார், ஆண்டாள் சுவாமிகள்.

    சீர்காழி தாடாளன் பெருமாள் கோவிலில் கூடாரவல்லி விழா

    சீர்காழி தாடாளன் பெருமாள் கோவிலில் கூடாரவல்லி விழா நடந்தது.
    சீர்காழி:

    சீர்காழியில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான தாடாளன் பெருமாள் என்னும் திருவிக்கிரம நாராயணப்பெருமாள் கோவில் அமைந்துள்ளது. 

    இந்த கோவில் மூலவர் உலகளந்த பெருமாள் என்றழைக்கப்படுகிறார். இக்கோவிலில் கூடாரவல்லி விழா நடைபெற்றது. 

    பெருமாள் சன்னதியில் லோகநாயகி தாயார், பெருமாள், ஆண்டாள் ஆகிய சுவாமிகள் ஒன்றாக எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். 

    முன்னதாக தாயார், பெருமாள், ஆண்டாள் சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம், செய்விக்கப்பட்டு, சாத்துமுறை மலர்கள், ஆபரணங்கள் கொண்டு அலங்காரம் தீபாராதனை காட்டப்பட்டது. 

    சமூக இடைவெளியுடன் பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பூஜைகளை பட்டாச்சாரியார்கள் பத்திநாதன், பிரபு செய்திருந்தனர். ஏற்பாடுகளை பரம்பரை ஆதீனம் கேகேசி சீனுவாஸ் சுவாமிகள் செய்திருந்தார்.
    Next Story
    ×