என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    கள்ளச்சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது

    ஊத்தங்கரை அருகே கள்ளச்சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது செய்யபப்ட்டனர்.
    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கீழ்மத்தூர் தாய்கண் வட்டம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக சிங்காரப் பேட்டை  போலீசாருக்கு ரகசியமாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையில்  போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தேடுதல்  வேட்டையில் ஈடுபட்டனர். 

    அப்போது காசிராஜன் விவசாய தோட்டப் பகுதியில் ரகசியமாக சாராயம் காய்ச்சி கொண்டிருந்த 2 பேரை போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர். உடனே அவர்களை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில் அவர்கள பெருமாள் (வயது 67)  சரவணன் (41) ஆகியோர் என தெரிய வந்தது. 2 பேரையும் கைது செய்த போலீசார்  அவர்களிடமிருந்து 10 லிட்டர் கள்ளச் சாராயத்தையும் பறிமுதல் செய்து கிருஷ்ணகிரி சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×