என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெண் மீது தாக்குதல்
சிவகாசி அருகே பெண் மேலாளர் மீது தாக்குதல்
சிவகாசி அருகே நகை அடகு நிறுவன பெண் மேலாளர் தாக்கப்பட்டார். இதுதொடர்பாக தாய்-மகள் கைது செய்யப்பட்டனர்.
விருதுநகர்
சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டையை அடுத்த வி.புதூரை சேர்ந்தவர் லட்சுமி பிரியா. இவர் தனியார் நகை அடகு நிறுவனத்தில் மேலாள ராக பணியாற்றி வருகி றார். அடகு வைத்த நகை களை திருப்பி கூடுதல் விலை தருவதாக இந்த நிறுவனம் சார்பில் அறிவிக் கப்பட்டுள்ளது.
அதன்படி சமுசிகாபுரத்தைச் சேர்ந்த முருகேசுவரி (38) தனது நகைகளை ரூ.82 ஆயிரத்துக்கு அடகு வைத்திருப்பதாகவும், அதனை திருப்பி தரவேண் டும் எனவும் கேட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து தனியார் நகை அடகு நிறுவனம் அந்த நகையை திருப்பி ரூ.84 ஆயிரம் தருவதாக உறுதி அளித்துள்ளது. இதுதொடர்பாக லட்சுமி பிரியாவுக்கும், முருகேசு வரிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது-.
இந்த முன்விரோதத்தில் லட்சுமிபிரியா இருசக்கர வாகனத்தில் வந்தபோது முருகேசுவரி, அவரது மகள் கார்த்திகா (19) ஆகியோர் வழிமறித்து தாக்கியதாக கீழராஜகுலராமன் போலீசில் புகார் செய்யப்பட்டது.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி முருகேசுவரி மற்றும் கார்த்திகாவை கைது செய்தனர்.
Next Story






