என் மலர்
உள்ளூர் செய்திகள்

நளினி- முருகன்
பரோலில் வந்துள்ள நளினி-முருகனுடன் சந்திப்பு
வேலூர் ஜெயிலில் பரோலில் வந்துள்ள நளினி-முருகனுடன் சந்தித்து பேசினர்.
வேலூர்:
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.
கோர்ட்டு உத்தரவுப்படி கணவன்-மனைவி 15 நாட்களுக்கு ஒருமுறை நேரில் சந்தித்து பேசி வருகிறார்கள்.
தற்போது பரோலில் வெளியே வந்துள்ள நளினி காட்பாடி பிரம்மபுரத்தில் தங்கியுள்ளார். அவர் முருகனை சந்திக்க அனுமதி கேட்டு போலீசார் மற்றும் சிறை துறை அதிகாரிகளுக்கு மனு அளித்தார்.
சந்திப்பின் போது கொரோனா விதி முறைகளை கடைபிடிக்க வேண்டும் என நிபந்தனை அளித்து இருவரும் சந்திக்க அனுமதி வழங்கினர். நளினி-முருகன் சந்திப்பு இன்று வேலூர் பெண்கள் ஜெயிலில் நடைபெற்றது.
இதையொட்டி பிரம்மபுரத்தில் இருந்து நளினியை வேலூர் ஆயுதப்படை டிஎஸ்பி மணிமாறன் தலைமையிலான போலீசார் பலத்த காவலுடன் பெண்கள் ஜெயிலிலுக்கு அழைத்து சென்றனர்.
அங்குள்ள ஒரு அறையில் காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை நளினி முருகன் சந்தித்து பேசினர். பின்னர் நளினி மீண்டும் பிரம்மபுரம் அழைத்து செல்லப்பட்டார்.
Next Story






