search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருநங்கை தற்கொலை
    X
    திருநங்கை தற்கொலை

    வில்லியனூர் அருகே திருநங்கை எலி மருந்து தின்று தற்கொலை

    வில்லியனூர் அருகே திருநங்கை எலி மருந்து தின்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே ஆரியபாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் துளசிங்கம். இவரது மகன் பிரவந்தி(வயது21).திருநங்கையான இவர் கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு அவதியடைந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று நோய் கொடுமை அதிகமானதால் பிரவந்தி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டில் இருந்த எலி மருந்தை (வி‌ஷம்) எடுத்து தின்று விட்டார்.

    இதில் மயங்கி விழுந்த பிரவந்தியை உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பிரவந்தி நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்து அவரது உறவினர் வீரப்பன் கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×