search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    பாகூரில் சாராயக்கடை கேஷியருக்கு கண்ணாடி பாட்டில் குத்து

    பாகூரில் சாராயக்கடை கேஷியர் தாக்கப்பட்டார்.
    பாகூர்:

    பாகூர் கரைமேடு சாலையை சேர்ந்தவர் சுதாகர் (வயது 37). சாராயக்கடை கேஷியர்.  இவர் பாகூரில் உள்ள சாராயக் கடையில் கேஷியராக வேலை செய்து வருகிறார். 

     இவரது கூட்டாளி முத்தையனுடன் பாகூரில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகில் மதுகுடித்து கொண்டு இருந்தார்.
    இந்த நிலையில் முன் விரோதம் காரணமாக இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் முத்தையன் அங்கு கீழே கிடந்த வீட்டுக்குப் பயன்படுத்தும் கண்ணாடியை எடுத்து உடைத்து சுதாகர் மார்பிலும், முகத்திலும் குத்திவிட்டு கொலை மிரட்டல் விட்டு தப்பி ஓடி விட்டார்.

    காயமடைந்த சுதாகர் அருகிலிருந்த மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை  அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்து வருகிறார். 

    இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய குமார், ஏட்டு ராதா கிருஷ்ணன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து முத்தையனை  தேடி வருகின்றனர்.

    Next Story
    ×