என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பாகூரில் சாராயக்கடை கேஷியருக்கு கண்ணாடி பாட்டில் குத்து
Byமாலை மலர்9 Jan 2022 8:40 AM GMT (Updated: 9 Jan 2022 8:40 AM GMT)
பாகூரில் சாராயக்கடை கேஷியர் தாக்கப்பட்டார்.
பாகூர்:
பாகூர் கரைமேடு சாலையை சேர்ந்தவர் சுதாகர் (வயது 37). சாராயக்கடை கேஷியர். இவர் பாகூரில் உள்ள சாராயக் கடையில் கேஷியராக வேலை செய்து வருகிறார்.
இவரது கூட்டாளி முத்தையனுடன் பாகூரில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகில் மதுகுடித்து கொண்டு இருந்தார்.
இந்த நிலையில் முன் விரோதம் காரணமாக இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் முத்தையன் அங்கு கீழே கிடந்த வீட்டுக்குப் பயன்படுத்தும் கண்ணாடியை எடுத்து உடைத்து சுதாகர் மார்பிலும், முகத்திலும் குத்திவிட்டு கொலை மிரட்டல் விட்டு தப்பி ஓடி விட்டார்.
காயமடைந்த சுதாகர் அருகிலிருந்த மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்து வருகிறார்.
இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய குமார், ஏட்டு ராதா கிருஷ்ணன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து முத்தையனை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X