என் மலர்
உள்ளூர் செய்திகள்

டாஸ்மாக் கடை
டாஸ்மாக்கில் திருட முயன்றவர் கைது
சீர்காழியில் டாஸ்மாக்கில் திருட முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.
சீர்காழி:
சீர்காழி ஈசானிய தெருவில் மயானத்திற்கு எதிரே டாஸ்மாக் கடை உள்ளது. சம்பவத்தன்று இந்த கடையின் ஊழியர்கள் இரவில் வழக்கம்போல்
கடையை பூட்டிவிட்டு சென்றனர்.
மறுநாள் காலை கடையை திறக்க வந்தபோது, முன்பக்க இரும்பு கதவும், அங்குள்ள சி.சி.டி.வி கேமராவும் உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து அவர்கள் சீர்காழி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மணிமாறன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்
தில்லை நடராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, சீர்காழி கோவிந்தராஜன் நகரைச் சேர்ந்த சக்திவேல் (வயது 19) கடப்பாரையால் இருப்புக் கதவை உடைப்பது தெரியவந்தது.
மேலும் ஆள்நடமாட்டம் இருந்ததால் திருட்டு முயற்சியை கைவிட்டு
தப்பிச் சென்றதும் பதிவாகியிருந்தது. இதையடுத்து, சக்திவேலை
போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story






