என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ராசிபுரம் அருகே கார் கவிழ்ந்து அய்யப்ப பக்தர் பலி
Byமாலை மலர்9 Jan 2022 6:27 AM GMT (Updated: 9 Jan 2022 6:27 AM GMT)
ராசிபுரம் அருகே கார் கவிழ்ந்து கர்நாடகாவை சேர்ந்த அய்யப்ப பக்தர் பலியானார்.
ராசிபுரம்:
கர்நாடகா மாநிலம், கிங்கேரி பகுதியில் இருந்து பிரணவ் (வயது 38), சந்தோஷ்குமார் (34), லோகேஷ், சதீஷ் (35), அருண் (32) மற்றும் டிரைவர் லட்சுமிகாந்த் (42) ஆகியோர் 2 நாட்களுக்கு முன்பு சபரிமலைக்கு காரில் புறப்பட்டுச் சென்றனர். காரை லட்சுமிகாந்த் ஓட்டிச்சென்றார்.
அவர்கள் அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு நேற்று அவர்கள் சபரிமலையில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பி சென்றுகொண்டிருந்தனர். இன்று காலை ராசிபுரம் அருகே உள்ள சேலம் நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பழைய பயணியர் மாளிகை அருகே வந்தபோது திடீரென்று காரின் டயர் வெடித்ததாக கூறப்படுகிறது.
இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்தது. இதில் சந்தோஷ்குமார் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவரை சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே சந்தோஷ்குமார் பரிதாபமாக இறந்தார்.
மற்றவர்கள் காயமின்றி தப்பினர். இதுபற்றி புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவிலுக்குச் சென்றுவிட்டு சாமி தரிசனம் செய்த பிறகு வீடு திரும்பியபோது அய்யப்ப பக்தர் விபத்தில் பலியான சம்பவம் அவர்கள் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X