என் மலர்
உள்ளூர் செய்திகள்

குந்தாரப்பள்ளியில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட மாடுகளை படத்தில் காணலாம்.
குந்தாரப்பள்ளி சந்தையில் 3 ஆயிரம் மாடுகள் விற்பனை
குந்தாரப்பள்ளி சந்தையில் வழக்கமாக 6 ஆயிரம் மாடுகள் வரை விற்பனையாகும். ஆனால் நேற்று நடந்த சந்தையில் 3 ஆயிரம் மாடுகள் மட்டுமே விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி:
பொங்கல் பண்டிகை வருகிற 14-ந்தேதி (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. பொங்கலை முன்னிட்டு கிருஷ்ணகிரி அருகே உள்ள குந்தாரப்பள்ளி வார சந்தையில் மாட்டுச்சந்தை நேற்று நடந்தது.
இங்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாமல், ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகளை கொண்டு வந்திருந்தனர். வழக்கத்திற்கு மாறாக இந்த முறை அதிக அளவில் மாடுகள் கொண்டு வரப்பட்டதால் விற்பனை மந்தமாக காணப்பட்டது.
இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது:- பொங்கல் பண்டிகையை எதிர்பார்த்து மாடுகளை விற்பனைக்கு வியாபாரிகள் கொண்டு வந்திருந்தனர். கர்நாடகா மாநிலத்தில் இருந்து 300-க்கும் மேற்பட்ட மாடுகளைக் கொண்டு வந்திருந்தனர். ஆனால் குறைந்த அளவே மாடுகள் விற்பனை ஆனது. அதிக மாடுகள் வரத்தால், விலை மிகவும் குறைந்தது. முன்பு ஒரு லட்சம் ரூபாய்க்கு கேட்கப்பட்ட ஒரு ஜோடி மாடுகள் இங்கு, 60 ஆயிரம் ரூபாய்க்கு கேட்கிறார்கள். இளைஞர்கள் மத்தியில், ஜல்லிக்கட்டு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால், காளை மாடுகளை வாங்க வருகின்றனர். விவசாயத்திற்கு பயன்படுத்தும் மாடுகளும், பசு மாடுகளும் விற்பது மிகவும் குறைந்துள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
குந்தாரப்பள்ளி சந்தையில் வழக்கமாக 6 ஆயிரம் மாடுகள் வரை விற்பனையாகும். ஆனால் நேற்று நடந்த சந்தையில் 3 ஆயிரம் மாடுகள் மட்டுமே விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதே போல குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் ஆடு, கோழிகளும் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. அதில் சண்டை சேவல்களும் கொண்டு வரப்பட்டன.
திண்டுக்கல், ஒட்டன்சந்திரம், பழனி, கொங்கணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சண்டை சேவல்கள் கொண்டு வரப்பட்டன. அதை வாங்க ஆந்திர மாநிலத்தில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்தன. இந்த சேவல்கள் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரையில் விற்பனை ஆனது. நேற்று சந்தைக்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சண்டை சேவல்கள், கோழிகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.
பொங்கல் பண்டிகை வருகிற 14-ந்தேதி (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. பொங்கலை முன்னிட்டு கிருஷ்ணகிரி அருகே உள்ள குந்தாரப்பள்ளி வார சந்தையில் மாட்டுச்சந்தை நேற்று நடந்தது.
இங்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாமல், ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகளை கொண்டு வந்திருந்தனர். வழக்கத்திற்கு மாறாக இந்த முறை அதிக அளவில் மாடுகள் கொண்டு வரப்பட்டதால் விற்பனை மந்தமாக காணப்பட்டது.
இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது:- பொங்கல் பண்டிகையை எதிர்பார்த்து மாடுகளை விற்பனைக்கு வியாபாரிகள் கொண்டு வந்திருந்தனர். கர்நாடகா மாநிலத்தில் இருந்து 300-க்கும் மேற்பட்ட மாடுகளைக் கொண்டு வந்திருந்தனர். ஆனால் குறைந்த அளவே மாடுகள் விற்பனை ஆனது. அதிக மாடுகள் வரத்தால், விலை மிகவும் குறைந்தது. முன்பு ஒரு லட்சம் ரூபாய்க்கு கேட்கப்பட்ட ஒரு ஜோடி மாடுகள் இங்கு, 60 ஆயிரம் ரூபாய்க்கு கேட்கிறார்கள். இளைஞர்கள் மத்தியில், ஜல்லிக்கட்டு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால், காளை மாடுகளை வாங்க வருகின்றனர். விவசாயத்திற்கு பயன்படுத்தும் மாடுகளும், பசு மாடுகளும் விற்பது மிகவும் குறைந்துள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
குந்தாரப்பள்ளி சந்தையில் வழக்கமாக 6 ஆயிரம் மாடுகள் வரை விற்பனையாகும். ஆனால் நேற்று நடந்த சந்தையில் 3 ஆயிரம் மாடுகள் மட்டுமே விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதே போல குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் ஆடு, கோழிகளும் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. அதில் சண்டை சேவல்களும் கொண்டு வரப்பட்டன.
திண்டுக்கல், ஒட்டன்சந்திரம், பழனி, கொங்கணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சண்டை சேவல்கள் கொண்டு வரப்பட்டன. அதை வாங்க ஆந்திர மாநிலத்தில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்தன. இந்த சேவல்கள் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரையில் விற்பனை ஆனது. நேற்று சந்தைக்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சண்டை சேவல்கள், கோழிகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.
Next Story






