என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILE PHOTO
    X
    FILE PHOTO

    பாதுகாவலர் பணியிடத்திற்கு தொகுப்பூதியத்தில் பணி நியமனம்

    புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்நோக்கு உதவியாளர் மற்றும் பாதுகாவலர் பணியிடங்கள் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்படவுள்ளதாக கலெக்டர் கவிதா ராமு தெரிவித்தார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் வன்கொடுமையினால் பாதிக்கப்படும் மகளிருக்கு மருத்துவ வசதி அளித்தல், சட்டப்பூர்வ நடவடிக்கைக்கு உதவி செய்தல் மற்றும் மன ரீதியான ஆலோசனைகள் வழங்குவதற்காக மத்திய அரசினால் அனுமதிக்கப்பட்டு உள்ளது.

    அதற்கான முதல் மையம் அக்டோபர் 2019 முதல் செயல்பட்டு வருகிறது. இம்மையத்திற்கு கீழ்க்காணும் விபரப்படியான பணியாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் தங்களது சுய விபரங்களை தட்டச்சு செய்து, 12.01.2022 மாலை 5.00 மணிக்குள் மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், புதுக்கோட்டை என்னும் முகவரிக்கு கிடைக்குமாறு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

    குறிப்பிட்ட காலக்கெடுவிற்குபின் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என தெரிவிக்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தை நேரிலோ அல்லது 04322 222270 எனும் தொலைபேசி மூலமாகவோ அணுகி பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    வழக்குப் பணியாளர் பணியிடம் 4,   சட்டப்படிப்பு, முதுநிலை சமூகப் பணி பெண் வன்கொடுமை தொடர்பாக 3 ஆண்டு பணிபுரிந்த முன் அனுபவம், மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.15,000 ஆகும்.

    பல்நோக்கு உதவியாளர் பணியிடம் 1,  மூன்றாண்டு முன் அனுபவமுள்ள நபர், மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.6,400 ஆகும்.

    பாதுகாவலர் பணியிடம் 1,  இரண்டாண்டு முன் அனுபவமுள்ள நபர்,  மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.10,000 ஆகும் என மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×