என் மலர்
உள்ளூர் செய்திகள்

இறந்து கிடந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர்.
அரசு அலுவலகத்தில் இறந்து கிடந்த ஓய்வு பெற்ற அதிகாரி
புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஓய்வு பெற்ற அதிகாரி இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுலவராக பணிபுரிந்தவர் சுப்பிரமணி (வயது 56). இவரது சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே கொண்ட மாணிக்கம்பட்டி ஆகும்.
மாற்றுத்திறனாளியான இவர் மூன்று சக்கர சைக்கிளில் அலுவலகத்திற்கு வந்து செல்வது வழக்கம். இவர் பணி ஓய்வு அடைந்தும் புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவகத்தில் தங்கியிருந்தார்.
இந்தநிலையில் நேற்று அலுவலக காவலாளி முருகன் 7 மணிக்கு வந்து பார்த்தபோது சுப்பிரமணி அசைவற்ற நிலையில் கிடந்துள்ளார். உடனடியாக வட்டார வளர்ச்சி அதிகாரிகள் சங்கரன் மற்றும் குமாரவேலனுக்கு தகவல் தரப்பட்டது.
புதுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. சப்&இன்ஸ்பெக்டர் ராஜகோபலன் வந்து பார்த்தபோது சுப்பிரமணி ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. உடனடியாக அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி போலீசார் அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக சுப்பிரமணி மனைவி சரோஜினி (52) கொடுத்த புகாரின்பேரில் நகர காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
Next Story






