என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILE PHOTO
    X
    FILE PHOTO

    மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கணினி முறையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி தொடங்கியது.
    புதுக்கோட்டை:
    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்த லில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கணினி வழி உள்ளாட்சி   அமைப்புகள் வாரியாக ஒதுக்கீடு செய்யும் முதல் கட்டப்பணி மாவட்ட தேர்தல் அலுவலர்  மற்றும் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.

    பின்னர் கலெக்டர் தெரிவித்ததாவது:& 
    தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் கால அட்டவணையின்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு எதிர்வரும் சாதாரணத்  தேர்தல் பயன்பாட்டிற்கு தேவைப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கணினி மூலம் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கீடு செய்யும் முதல் கட்டப்பணி நடத்தப்பட்டது.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 8 பேரூராட்சிகளில் அமைக்கப்பட்டுள்ள 121 வாக்குச்சாவடிகளுக்கு 146 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், இரண்டு நகராட்சிகளில் அமைக்கப்பட்டுள்ள 159 வாக்குச்சாவடிகளுக்கு 191 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும் என மொத்தம் 337 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

    புதுக்கோட்டை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதுபோக 324 கட்டுப்பாட்டு கருவிகளும், 869 வாக்குப்பதிவு கருவிகளும் உபரியாக இருப்பில் உள்ளன. 

    புதுக்கோட்டை மாவட்டத்தில் 9.12.2021 அன்று வெளியிடப்பட்டுள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியலின்படி 1,15,277 ஆண் வாக்காளர்களும், 1,22,576 பெண் வாக்காளர்களும், 20 இதர வாக்காளர்களும் என மொத்தம் 2,37,873 வாக்காளர்கள் உள்ளனர் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்தார்.
    Next Story
    ×