என் மலர்
உள்ளூர் செய்திகள்

குப்பை கொட்டப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.
நூலகம் அருகே குப்பைகளை கொட்டும் ஊழியர்கள்
ராமநத்தம் கிராம ஊராட்சியில் சேர்க்கப்படும் கழிவு குப்பைகள் அனைத்தும் நூலகம் அருகே கொட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திட்டக்குடி:
திட்டக்குடி அடுத்த மங்களூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ராமநத்தம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி துறை மற்றும் ஊராட்சி துறை சார்பில் அனைத்து அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட நூலகம் செயல்பட்டு வருகிறது. இதன் எதிர்புறம் ராமநத்தம் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு செயல்பட்டு வரும் நூலகம் அருகில் ராமநத்தம் கிராம ஊராட்சியில் சேர்க்கப்படும் கழிவு குப்பைகள் அனைத்தும் நூலகம் அருகே கொட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, அருகாமையில் பள்ளிக்கூடம் செயல்படுகிறது. குடியிருப்புகள் உள்ளன. குப்பைகள் கொட்டுவதால் பன்றிகள் அதிக அளவில் அங்கு முகாமிட்டு உள்ளதால் அதிலிருந்து வரும் துர்நாற்றம் வீசுவதால் அவ்வழியே செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் உட்பட முகம் சுழிக்கும் அளவிற்கு உள்ளதாகவும் ஊராட்சி மன்ற தலைவர் அப்பகுதியில் குப்பை கொட்டக்கூடாது என பலமுறை எச்சரித்தும் ஊராட்சியில் பணிபுரியும் ஊழியர்கள் அவ்விடத்தில் தொடர்ச்சியாக குப்பைகள் கொட்டுகின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் விசாரணை செய்து ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திட்டக்குடி அடுத்த மங்களூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ராமநத்தம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி துறை மற்றும் ஊராட்சி துறை சார்பில் அனைத்து அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட நூலகம் செயல்பட்டு வருகிறது. இதன் எதிர்புறம் ராமநத்தம் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு செயல்பட்டு வரும் நூலகம் அருகில் ராமநத்தம் கிராம ஊராட்சியில் சேர்க்கப்படும் கழிவு குப்பைகள் அனைத்தும் நூலகம் அருகே கொட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, அருகாமையில் பள்ளிக்கூடம் செயல்படுகிறது. குடியிருப்புகள் உள்ளன. குப்பைகள் கொட்டுவதால் பன்றிகள் அதிக அளவில் அங்கு முகாமிட்டு உள்ளதால் அதிலிருந்து வரும் துர்நாற்றம் வீசுவதால் அவ்வழியே செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் உட்பட முகம் சுழிக்கும் அளவிற்கு உள்ளதாகவும் ஊராட்சி மன்ற தலைவர் அப்பகுதியில் குப்பை கொட்டக்கூடாது என பலமுறை எச்சரித்தும் ஊராட்சியில் பணிபுரியும் ஊழியர்கள் அவ்விடத்தில் தொடர்ச்சியாக குப்பைகள் கொட்டுகின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் விசாரணை செய்து ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story






