search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    தாய்க்கு செல்போனில் தொல்லை கொடுத்ததால் பரோட்டா மாஸ்டர் கொலை

    தாய்க்கு செல்போனில் தொல்லை கொடுத்ததால் பரோட்டா மாஸ்டரை கொன்றேன். கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த ஒதியத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 48). இவர் வேலூர் பலவன்சாத்து குப்பத்தில் உள்ள ஒரு ஓட்டலில் பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். 

    இந்தநிலையில் கடந்த 3-ந்தேதி வேலூர் புதிய மீன் மார்க்கெட் அருகே ஆட்டோவில் வைத்து வெங்கடேசனை தாக்கிய கும்பல் அவரை கீழே தள்ளி விட்டு தப்பி சென்றனர். மயங்கி கிடந்த அவரை போலீசார் மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் பரிதாபமாக இறந்தார்.

    வெங்கடேசனை தாக்கி ஆட்டோவில் இருந்து கீழே தள்ளி விட்டு சென்ற கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். பிரேத பரிசோதனையில், வெங்கடேசன் தாக்குதலில் இறந்ததாக டாக்டர் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

    இந்த நிலையில் கொலை தொடர்பாக வேலூர் கொணவட்டத்தை சேர்ந்த அல்தாப் அகமது (21) அவரது நண்பர்கள் இலாகி (33) அப்துல் ரசாக் (23) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.

    இதுகுறித்து அல்தாப் அகமது போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    கடந்த மாதம் எனது தந்தைக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டது. அவரை அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தோம். அவருடன் எனது தாயார் தங்கியிருந்தார். அதே ஆஸ்பத்திரியில் கொலைசெய்யப்பட்ட வெங்கேடசனின் தாயார் உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சையில் இருந்தார்.

    அப்போது வெங்கடேசன் எனது தாயாருக்கு சிறு, சிறு உதவிகள் செய்துள்ளார். மனிதாபிமான அடிப்படையில் உதவிகள் செய்வதாக நினைத்தோம். எனது தாயாரின் செல்போன் எண்ணை வெங்கடேசன் வேறு நபர்கள் மூலமாக பெற்றுள்ளார்.எனது தந்தை சில நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.

    இதையடுத்து வெங்கடேசன் எனது தாயாரிடம் அடிக்கடி செல்போனில் தொடர்பு கொண்டு தொல்லை கொடுத்தார். உனது கணவர் இறந்துவிட்டார் என்ன உதவி வேண்டுமானாலும் செய்கிறேன் என பேசிய அவர் செல்போனில் பாலியல் தொல்லை கொடுக்க ஆரம்பித்தார். இதுகுறித்து எனது தாயார் என்னிடம் கூறினார்.

    இதனால் ஆத்திரமடைந்த நான் நண்பர்களை அழைத்துக் கொண்டு வெங்கடேசன் வேலைபார்க்கும் ஓட்டலுக்கு சென்று தட்டிக்கேட்டோம். அப்போது தகராறு ஏற்பட்டது. 

    வெங்கடேசனை ஆட்டோவில் கடத்தி வேலூருக்கு கொண்டு வந்தோம். மேலும் அவரை தாக்கினோம். பின்னர் அவரை மீன் மார்க்கெட் அருகே விட்டு சென்று விட்டோம். போலீசார் அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்த போது இறந்துவிட்டார்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    போலீசார் அல்தாப் அஹமது அவரது நண்பர்கள் இலாகி, அப்துல்ரசாக் மற்றும் அல்தாப்அகமது ஆகியோரை கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.
    Next Story
    ×