என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    வேலூர் மாவட்டத்தில் இன்று 273 பேருக்கு கொரோனா

    வேலூர் மாவட்டத்தில் இன்று 273 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை 50,895 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 49,282 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 1,145 பேர் பலியானார்கள். தற்போது 468 பேர் சிகிச்சையின் உள்ளனர்.

    கடந்த வாரம் அதிக பட்சமாக 20 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டு வந்தனர். திடீரென பாதிப்பு அதிகரிக்க தொடங் கியது. நேற்று 3 மடங்கு உயர்ந்து கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டியது. இன்று ஒரே நாளில் வேலூர் மாவட்டத்தில் 273 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    வேலூர் மாநகராட்சி பகுதியில் மட்டும் 150-க்கும் மேற்பட்டோர் பாதிக்கபட்டுள்ளனர். தற்போது பாதிக்கப் பட்டவர்களில் 200 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 268 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.

    ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை உள்ளவர்களில் இதுவரை யாருக்கும் ஆக்சிஜன் தேவைப் படவில்லை. அவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் கூடுதலாக படுக்கை வசதிகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களை ஏற்படுத்தும் நடவடிக் கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

    வேலூர் தனியார் ஆஸ்பத்திரி, வேலூர் ஜெயில் ஆகிய இடங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    வேலூர் லாட்ஜ் மற்றும் தங்கும் விடுதிகளில் தங்கியுள்ள வெளிமாநிலத்தவர்கள் மூலம் பரவலை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    வேலூர் மாநகராட்சி பகுதியில் முகக் கவசம் அணிவது கட்டாயப் படுத்தப்பட்டு உள்ளது. முக கவசம் அணியாத வியாபாரிகளுக்கு ரூ.500 பொதுமக்களுக்கு ரூ.200 அபராதம் விதித்து வருகின்றனர்.

    வேலூர் மாவட்டத்தில் கொரோனா சமூக பரவலாக பரவத் தொடங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் கூட்டமாக கூட வேண்டாம்.முடிந்த அளவு வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.

    தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×