search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILE PHOTO
    X
    FILE PHOTO

    கல்வி உதவித்தொகை பெறுபவர்கள் விண்ணப்பிக்க கால நீட்டிப்பு

    புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒன்றிய அரசின் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.
    புதுக்கோட்டை: தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் பதினொன்றாம் வகுப்பு  முதல் பி.எச்.டி. படிப்பு வரை (தொழிற்கல்வி, தொழில்நுட்ப கல்வி, மருத்துவம் உட்பட) பயிலும் இஸ்லாமிய, கிறிஸ்தவ, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் மதங்களை சார்ந்த மாணவ, மாணவிகளிடமிருந்து                         2021&22 ஆம் ஆண்டிற்கு ஒன்றிய அரசின் பள்ளி மேற்படிப்பு, தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டத்தின்கீழ் (புதியது மற்றும் புதுப்பித்தல்) உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க 15.01.2022 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.  
    தகுதி வாய்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவிகள் மேற்படி காலக்கெடுவிற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், அனைத்து கல்வி நிலையங்களும் சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை கோரி மாணவ,    மாணவிகளிடமிருந்து வரப்பெற்ற விண்ணப்பங்களை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தேசிய கல்வி உதவித்தொகை இணையத்தில் சரிபார்க்க வேண்டும் எனவும் தகுதியுள்ள   சிறுபான்மையின மாணவ, மாணவியரின் விண்ணப்பத் தினை சரிபார்ப்பதில் சுணக்கம் காட்டும், தவறும் கல்வி நிலையங்களின் மீது அரசால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது. 
    பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகை விண்ணப்பங்கள் கல்வி நிலையங்கள் மூலம் சரிபார்ப்பு செய்து அனுப்ப கடைசி தேதி 15.01.2022 மற்றும் பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை விண்ணப்பங்கள் கல்வி நிலையங்கள் மூலம் சரிபார்ப்பு செய்து அனுப்ப கடைசி தேதி 31.01.2022 என கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.  
    எனவே தொடர்புடைய கல்வி நிலையங்கள் உரிய காலத்திற்குள் சரிபார்ப்பு                      செய்து மாவட்ட கல்வி உதவித்தொகை அலுவலருக்கு அனுப்பி வைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் கூடுதல் விவரங்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட  ஆட்சியரக கூடுதல் கட்டிடத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம் என மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×