என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சேந்தங்குடி பகுதியில் சாலையில் மண் அரிப்பு
Byமாலை மலர்4 Jan 2022 6:56 AM GMT (Updated: 4 Jan 2022 6:56 AM GMT)
சாலையில் மண்அரிப்பு ஏற்பட்டுள்ளது
சீர்காழி:
சீர்காழி-சிதம்பரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் விளந்திட சமுத்திரம் பகுதியிலிருந்து சுமார் 1 கி.மீ தூரம் உள்ள நெடுஞ்சாலை 2020-21 ஒருங்கிணைந்த சாலை விரிவாக்கத் திட்டத்தின் கீழ் இருவழித் தடத்திலிருந்து பலவழித்தடமாக சில மாதங்களுக்கு முன்னர் மாற்றி அமைக்கப்பட்டது.
இந்த பணிக்காக சாலையோரம் இடையூறாக உள்ள மரங்கள் அகற்றப்பட்டு, சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு பணிகள் முடிந்து பயன்பாட்டில் உள்ளது.
இதில் ஒரு பகுதியாக சேந்தங்குடி நெடுஞ்சாலையில் சாலையோரம் உள்ள பெரிய குளத்தின் பக்கவாட்டு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய தார்சாலையின் ஒரு பகுதியில் மண் அணைத்து குளத்திற்கு கான்கிரீட் கட்டை அமைக்கப்பட்டது.
இதனிடையே போக்குவரத்து பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டு சில மாதங்களிலேயே குளத்தின் பக்கவாட்டு பகுதி நெடுஞ்சாலையோரம் மண் அரிப்பு ஏற்பட்டு பள்ளங்கள் உருவாகியுள்ளது.
இதனால் அவ்வழியாக வந்து செல்லும் பஸ் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் சாலை சரிந்து விபத்தில் சிக்கும் நிலை ஏற்படக்கூடிய ஆபத்தான சூழல் நிலவுகிறது.
ஆகையால் நெடுஞ்சாலைத்துறையினர் குளத்திற்கு பக்கவாட்டு தடுப்பு கம்பிகள் அமைத்தும், மண் அரிப்பை தடுக்கும் வகையில் தரமான சிமெண்ட் கான்கிரீட் கட்டைகள் அமைக்கவும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X