என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தடையை மீறி நடந்த மஞ்சு  விரட்டு
    X
    தடையை மீறி நடந்த மஞ்சு விரட்டு

    திருப்பத்தூர் அருகே தடையை மீறி நடந்த மஞ்சு விரட்டு 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு

    தடையை மீறி நடந்த மஞ்சுவிரட்டில் 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
    திருப்பத்தூர்:

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள ஊர்குளத்தான்பட்டி கிராமத்தில் வெள்ளி மஞ்சு விரட்டு நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. ஆயிரக்கணக்கான பொதுமக்களும், நூற்றுக்கணக்கான மாடு பிடி வீரர்களும்  கலந்து கொண்டனர்.

    வீரர்களும், இளைஞர்களும் போட்டி போட்டு காளைகளை விரட்டி பிடித்தனர். இதில் பல காளைகள் காளையர்களை மிரட்டும் விதத்தில்  பிடிபடாமல் சென்றது. காளைகள் முட்டியதில் 6-க்கும் மேற்பட்டோர் லேசான  காயத்துடன் திருப்பத்தூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற் றனர். 3 பேர் மேல் சிகிச் சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

    ஆண்டுதோறும் மார்கழி மாதம் வெள்ளிக்கிழமை நடத்தப்படும் இந்த வெள்ளி மஞ்சுவிரட்டு, இந்த ஆண்டு ஊர்குளத்தான்பட்டி இளைஞர்கள் பழனிக்கு பாத யாத்திரை செல்வதால் ஒருவாரம் முன்னதாகவே நடத்தப்பட்டது.

     முன்னதாக முனியன் கோவில், கருப்பர் கோவில் ஆகிய கிராம தெய்வங்களை வழிபாடு செய்துவிட்டு  ஊர் பொதுமக்கள் பட் டெடுத்து மஞ்சுவிரட்டு தொழுவிற்கு சென்றனர்.  அங்கு வழிபாடு நடத்திய பின்னர் ஊர்பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து தொழுவில் மஞ்சு விரட்டு நடத்தி வெற்றி பெற்ற காளைகள் மற்றும் காளையர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.
    Next Story
    ×