என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
புத்தாண்டில் பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி
திருவண்ணாமலையில் புத்தாண்டில் பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் பல நாட் களாக மழை பெய்யவில்லை. மார்கழி மாதத்தை முன்னிட்டு கடும் குளிர் வாட்டி வந்தது.
இந்த நிலையில் புத்தாண்டை வரவேற்கும் வகையில் நேற்றும் இன்றும் மழை பெய்து வருகிறது.
விட்டு விட்டு பெய்து வரும் இந்த சாரல் மழை பொது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. புத்தாண்டில் மழை பெய்துள்ளதால் இந்த ஆண்டு வளமான ஆண்டாக இருக்கும் என்று அனைத்து தரப்பு மக்களும் கருதுகின்றனர்.
இந்த சாரல் மழை பெய்யும் போது பொதுமக்கள் சாலை ஓரங்களில் ஒதுங்கி நின்றுவிட்டு மழை நின்றதும் தங்களது பணிகளைச் செய்ய சென்றனர். சாலையோர வியாபாரிகள் வியாபாரம் செய்ய முடியாமல் பாதிக்கப் பட்டனர்.
திருவண்ணாமலை மற்றும் பல்வேறு பகுதிகளிலும் இன்றும் மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக விவசாய பயிர்கள் பச்சை பசேலென காட்சி அளிக்கின்றன.
Next Story






