search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    திருமானூர் அருகே வேனில் இருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல்- 2 பேர் கைது

    திருமானூர் அருகே வேனில் இருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கீழப்பழுவூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட இலந்தைகூடம் கிராமத்தில் இன்ஸ்பெக்டர் சகாயம் அன்பரசு உத்தரவின்பேரில் வெங்கனூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கருப்பையன் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அங்குள்ள மளிகை கடை அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்ற வேன் அருகே சென்று, அங்கிருந்தவர்களிடம் விசாரணையில் ஈடுபட்டார். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தையடுத்து, வேனை சோதனையிட்டதில் சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து அவற்றை கொண்டு வந்த திருச்சி மாவட்டம் கீழ கண்ணுகுளம் கிராமத்தை சேர்ந்த குமரவேல்(வயது 35) மற்றும் பழம்புத்தூர் கிராமத்தை சேர்ந்த வைத்திலிங்கத்தின் மகன் விக்னேஷ்(20) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் வேன், ரூ.1 லட்சத்து 82 ஆயிரம் மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய மளிகைக்கடை உரிமையாளர் செம்பியக்குடி கிராமத்தை சேர்ந்த பாண்டியன் (36) மற்றும் அந்த கடையில் வேலை பார்க்கும் வைத்தியநாதபுரம் கிராமத்தை சேர்ந்த ஹரிஹரன் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    Next Story
    ×