search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    ராணிப்பேட்டை அருகே கிரேன் மோதி பெண் பலி

    ராணிப்பேட்டை அருகே கிரேன் மோதி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அருகே உள்ள அக்ராவரம், மலைமேடு ஜே.ஜே.நகர் பகுதியை சேர்ந்தவர் நாகம்மாள் (வயது 35). அப்பகுதியில் உள்ள தோல் தொழிற்சாலை ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று இரவு அக்ராவரம் பொன்னை- சாலையில், மலைமேடு அருகே நடந்து சென்றபோது, பின்புறம் வந்த கிரேன் வாகனம் நாகம்மாள் மீது மோதியது. இதில் நாகம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×