என் மலர்
உள்ளூர் செய்திகள்

எடை கருவிகள் பறிமுதல்
ஆரணியில் 64 எடை கருவிகள் பறிமுதல்
சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் மறு முத்திரையிடாத மின்னணு தராசுகள் 36, மேசை தராசுகள் 11, எடைக்கற்கள் 9, நீட்டல் அளவைகள் 5, ஊற்றல் அளவைகள் 3 என ஆக மொத்தம் 64 தராசுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆரணி:
தமிழக தொழிலாளர் ஆணையர் அப்துல் ஆனந்த் உத்தரவின்படி வேலூர் தொழிலாளர் இணை ஆணையர் தி.புனிதவதி வழிகாட்டுதலின் படியும் திருவண்ணாமலை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) சி.மீனாட்சி தலைமையில் ஆரணியில் காந்தி ரோடு, மார்க்கெட் ரோட்டில் உள்ள மளிகைக் கடைகள், பழக்கடைகள், காய்கறி கடைகளில் பயன்படுத்தப்படுகின்ற தராசுகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அப்போது சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் மறு முத்திரையிடாத மின்னணு தராசுகள் 36, மேசை தராசுகள் 11, எடைக்கற்கள் 9, நீட்டல் அளவைகள் 5, ஊற்றல் அளவைகள் 3 என ஆக மொத்தம் 64 தராசுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அப்போது திருவண்ணாமலை தொழிலாளர் உதவி ஆய்வாளர் ந.பிரகாஷ், ஆரணி தொழிலாளர் உதவி ஆய்வாளர் த.சாந்தி, ஆரணி முத்திரை ஆய்வாளர் பா.சிவகுமார், தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் ஆ.அத்திப்பழம், மு.தனலட்சுமி, சுபாஷ் சந்தர் ஆகியோர் ஆய்வில் பங்கேற்றனர்.
உதவி ஆணையர் சி.மீனாட்சி கூறுகையில் வணிகர்கள் தாங்கள் பயன்படுத்தும் தராசுகளை உரிய காலத்துக்குள் மறு முத்திரையிடாமல் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் ரூ.5000 அபராதம் விதிக்கப்படும். முத்திரையிட்டு அதற்கான சான்றிதழ் பார்வையில் தெரியும் படி கட்டி வைக்க வேண்டும், கட்டி வைக்காவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும், என எச்சரித்தார்.
தமிழக தொழிலாளர் ஆணையர் அப்துல் ஆனந்த் உத்தரவின்படி வேலூர் தொழிலாளர் இணை ஆணையர் தி.புனிதவதி வழிகாட்டுதலின் படியும் திருவண்ணாமலை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) சி.மீனாட்சி தலைமையில் ஆரணியில் காந்தி ரோடு, மார்க்கெட் ரோட்டில் உள்ள மளிகைக் கடைகள், பழக்கடைகள், காய்கறி கடைகளில் பயன்படுத்தப்படுகின்ற தராசுகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அப்போது சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் மறு முத்திரையிடாத மின்னணு தராசுகள் 36, மேசை தராசுகள் 11, எடைக்கற்கள் 9, நீட்டல் அளவைகள் 5, ஊற்றல் அளவைகள் 3 என ஆக மொத்தம் 64 தராசுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அப்போது திருவண்ணாமலை தொழிலாளர் உதவி ஆய்வாளர் ந.பிரகாஷ், ஆரணி தொழிலாளர் உதவி ஆய்வாளர் த.சாந்தி, ஆரணி முத்திரை ஆய்வாளர் பா.சிவகுமார், தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் ஆ.அத்திப்பழம், மு.தனலட்சுமி, சுபாஷ் சந்தர் ஆகியோர் ஆய்வில் பங்கேற்றனர்.
உதவி ஆணையர் சி.மீனாட்சி கூறுகையில் வணிகர்கள் தாங்கள் பயன்படுத்தும் தராசுகளை உரிய காலத்துக்குள் மறு முத்திரையிடாமல் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் ரூ.5000 அபராதம் விதிக்கப்படும். முத்திரையிட்டு அதற்கான சான்றிதழ் பார்வையில் தெரியும் படி கட்டி வைக்க வேண்டும், கட்டி வைக்காவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும், என எச்சரித்தார்.
Next Story






