என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.15 லட்சம்

    மத்திய அரசின் நிவாரணத்தொகை ரூ.10 லட்சம் மற்றும் மாநில அரசின் நிவாரண தொகை ரூ.5 லட்சம் மொத்தம் ரூ. 15 லட்சம் நிதியுதவி தொகை அவர்களின் வங்கி கணக்கில் வைக்கப்பட்டதற்கான ஆணையினை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் வழங்கினார்.
    ராணிப்பேட்டை:

    கொரோனா தொற்று ஏற்பட்டு தாய் தந்தையர்கள் இரண்டு பேரையும் இழந்த குழந்தைகளின் மறுவாழ்விற்காக தமிழக அரசின் மூலமாக ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் அவர்கள் அறிவித்து அதற்கான நிவாரண நிதிகளை வழங்கினார்கள். அதேபோல மத்திய அரசும் தலா ரூ.10 லட்சம் நிதி வழங்கிட ஆணையிட்டுள்ளது.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனாவால் தாய் தந்தையை இழந்த 3 குழந்தைகள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறையின் மூலம் கண்டறிப்பட்டனர்.

    அவர்களுக்கு மத்திய அரசின் நிவாரணத்தொகை ரூ.10 லட்சம் மற்றும் மாநில அரசின் நிவாரண தொகை ரூ.5 லட்சம் மொத்தம் ரூ. 15 லட்சம் நிதியுதவி தொகை அவர்களின் வங்கி கணக்கில் வைக்கப்பட்டதற்கான ஆணையினை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் வழங்கினார்.

    குழந்தைகளின் உறவினர்களிடம் குழந்தைகளின் படிப்பு மற்றும் எதிர்கால பயன்பாட்டிற்காக பயன்படுத்திக்கொண்டு இவர்களை நன்றாக படிக்க வைக்க வேண்டுமென அறிவுரை கூறினார். பெற்றோர்களை இழந்த குழந்தைகளை பராமரிக்கும் உறவினர்களுக்கு பராமரிப்பு தொகையாக ரூ.3 ஆயிரம் விரைவில் வழங்கப்படவுள்ளது.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் 208 குழந்தைகள் பெற்றோர்களில் ஒருவரை இழந்துள்ளனர்.

    இதில் 137 குழந்தைகளுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதியுதவி ஏற்கெனவே வங்கி கணக்கில் வழங்கப்பட்டுள்ளது. மீதம் உள்ளவர்களுக்கு விரைவில் வழங்கபட உள்ளது.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கெஜலட்சுமி, அலுவலக கண்காணிப்பாளர் முருகன், புறத்தொடர்பு அலுவலர் அரவிந்த் மற்றும் உறவினர்கள் கலந்துக்கொண்டனர்.
    Next Story
    ×