என் மலர்
உள்ளூர் செய்திகள்

குங்கிலியநத்தம் ஏரியில் இருந்து தண்ணீர் வடிந்து வறண்டு காணப்படுவதை காணலாம்
வாணாபுரம் அருகே நீர் நிரம்பி கடல்போல் காட்சியளித்த குங்கிலியநத்தம் ஏரி வறண்டது
வாணாபுரம் அருகே நீர் நிரம்பி கடல்போல் காட்சியளித்த குங்கிலியநத்தம் ஏரி தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
வாணாபுரம்:
வாணாபுரத்தை மையமாகக் கொண்டு 20-க்கும் மேற்பட்ட ஏரிகள் பொதுப்பணித்துறைக்கு சொந்தமாக உள்ளன. ஏரிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியது. இதனால் உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. அதுமட்டுமின்றி குளம், குட்டைகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியிருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சிடைந்துள்ளனர். ஏரிகள், குளம், குட்டைகளில் மழைக்காலத்தில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் கோடைக்காலத்தில் விவசாயிகள் அதிகளவில் பயன்படுத்தி வருகிறார்கள்.
வாணாபுரம் அருகில் உள்ள குங்கிலியநத்தம் ஏரி பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அந்த ஏரிஅண்மையில் பெய்த மழையால் தண்ணீர் தேங்கி கடல் போல் காட்சியளித்தது. அதில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீன் வளர்ப்பதற்காக குத்தகைக்கு விடப்பட்டது. ஏரியில் மீன் குஞ்சுகள் விடப்பட்டு மீன்கள் வளர்க்கப்பட்டு வந்தது. இருப்பினும், ஏரி முழுவதும் தண்ணீர் தேங்கியிருந்தது. கடந்த 10 நாட்களுக்குள் தண்ணீர் முழுவதும் வடிந்து ஏரியில் குறைந்த அளவே தண்ணீர் உள்ளது. ஆங்காங்கே உள்ள பள்ளத்தில் மட்டும் தண்ணீர் தேங்கி உள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்து ஏரியில் மீன்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. இதனால் ஏரி முழுவதும் தண்ணீர் தேங்கி இருப்பதைப் பயன்படுத்தி கோடைக்காலத்தில் அதிகளவில் விவசாயம் செய்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ஏரிகளில் தண்ணீர் நிரம்பி உள்ள நிலையில் தற்போது குங்கிலியநத்தம் ஏரியில் இருந்து தண்ணீர் முற்றிலும் ெவளியேறி விட்டதால், குத்தகைதாரர் மீன்களை பிடித்து விற்பனை செய்து வருகிறார். எதிர்வரும் காலத்தில் விவசாயத்துக்கு தண்ணீர் இல்லாத நிலை உருவாகி விட்டது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேறுவதை தடுக்க வேண்டும். ஏரிக்கு தண்ணீர் வர வழிவகை செய்ய வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் கூறினர்.
வாணாபுரத்தை மையமாகக் கொண்டு 20-க்கும் மேற்பட்ட ஏரிகள் பொதுப்பணித்துறைக்கு சொந்தமாக உள்ளன. ஏரிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியது. இதனால் உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. அதுமட்டுமின்றி குளம், குட்டைகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியிருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சிடைந்துள்ளனர். ஏரிகள், குளம், குட்டைகளில் மழைக்காலத்தில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் கோடைக்காலத்தில் விவசாயிகள் அதிகளவில் பயன்படுத்தி வருகிறார்கள்.
வாணாபுரம் அருகில் உள்ள குங்கிலியநத்தம் ஏரி பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அந்த ஏரிஅண்மையில் பெய்த மழையால் தண்ணீர் தேங்கி கடல் போல் காட்சியளித்தது. அதில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீன் வளர்ப்பதற்காக குத்தகைக்கு விடப்பட்டது. ஏரியில் மீன் குஞ்சுகள் விடப்பட்டு மீன்கள் வளர்க்கப்பட்டு வந்தது. இருப்பினும், ஏரி முழுவதும் தண்ணீர் தேங்கியிருந்தது. கடந்த 10 நாட்களுக்குள் தண்ணீர் முழுவதும் வடிந்து ஏரியில் குறைந்த அளவே தண்ணீர் உள்ளது. ஆங்காங்கே உள்ள பள்ளத்தில் மட்டும் தண்ணீர் தேங்கி உள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்து ஏரியில் மீன்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. இதனால் ஏரி முழுவதும் தண்ணீர் தேங்கி இருப்பதைப் பயன்படுத்தி கோடைக்காலத்தில் அதிகளவில் விவசாயம் செய்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ஏரிகளில் தண்ணீர் நிரம்பி உள்ள நிலையில் தற்போது குங்கிலியநத்தம் ஏரியில் இருந்து தண்ணீர் முற்றிலும் ெவளியேறி விட்டதால், குத்தகைதாரர் மீன்களை பிடித்து விற்பனை செய்து வருகிறார். எதிர்வரும் காலத்தில் விவசாயத்துக்கு தண்ணீர் இல்லாத நிலை உருவாகி விட்டது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேறுவதை தடுக்க வேண்டும். ஏரிக்கு தண்ணீர் வர வழிவகை செய்ய வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் கூறினர்.
Next Story






