என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பெருமாநல்லூர் அருகே அரசு பஸ் மோதி முதியவர் பலி - பொதுமக்கள் போராட்டம்
Byமாலை மலர்27 Dec 2021 7:56 AM GMT (Updated: 27 Dec 2021 7:56 AM GMT)
விபத்துக்குள்ளான பேருந்து நிற்காமல் சென்றதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பேருந்தை துரத்தி சென்று பெருமாநல்லூரில் சிறைப்பிடித்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம், அவிநாசியை அடுத்து பெருமாநல்லூர் அருகே அப்பியாபாளையம் ஆதிதிராவிடர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் மாறன் ( வயது 60). விவசாயி கூலித் தொழிலாளி. இவர் நேற்று இரவு அப்பியாபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள கடை முன் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்துள்ளார்.
அப்போது நம்பியூரில் இருந்து திருப்பூர் நோக்கி வந்த அரசு பேருந்து (வழித்தட எண் 26) மற்றொரு பேருந்தை முந்தி சென்று இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த முதியவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பலத்த காயமடைந்த மாறன் உயிரிழந்தார். மேலும் விபத்துக்குள்ளான பேருந்து நிற்காமல் சென்றதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பேருந்தை துரத்தி சென்று பெருமாநல்லூரில் சிறைப்பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த பெருமாநல்லூர் போலீசார் ஓட்டுநர் மற்றும் நடத்துநரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதையடுத்து பொதுமக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி கோஷமிட்டனர்.
உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறிய போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X