என் மலர்
உள்ளூர் செய்திகள்

மரணம்
தியாகதுருகத்தில் கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் பலி
தியாகதுருகத்தில்கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கண்டாச்சிமங்கலம்:
தியாகதுருகம் புகையிலை தோட்டத் தெருவைச் சேர்ந்தவர் பிரபாகரன் மகன் உதய பாரதி(வயது 37). மனநலம் பாதிக்கப்பட்ட இவர் கடந்த 23-ந் தேதி இரவு திடீரென மாயமானார். இதையடுத்து அக்கம் பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடியும் அவரை காணவில்லை.
இந்த நிலையில் நேற்று வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றில் உதய பாரதி இறந்து கிடந்தார். இதுபற்றிய தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் உதயபாரதியின் உடலை மீட்டு தியாகதுருகம் போலீசார் மூலம் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். உதயபாரதி கிணற்றில் தவறி விழுந்து இறந்து இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






