என் மலர்
உள்ளூர் செய்திகள்

மரணம்
மயிலாடுதுறை அருகே கத்தியால் குத்தப்பட்ட வேன் டிரைவர் பலி
மயிலாடுதுறை அருகே கத்தியால் குத்தப்பட்ட வேன் டிரைவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை அருகே எஸ்.எஸ். நல்லூர் பணப்பள்ளி கிராமம் தலையாரி தெருவை சேர்ந்த சேகர் மகன் பிரவீன் (வயது 30). வேன் டிரைவர். இவர் கடந்த 1-12-2021 அன்று மாலை வேனில் ஏற்றி வந்த பள்ளி குழந்தைகளை நத்தம் கடைவீதியில் இறக்கி விட்டுவிட்டு குழந்தைகளின் பெற்றோரிடம் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த 2 பே்ா முன்விரோதம் காரணமாக பிரவீனை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கத்திக்குத்தில் காயம் அடைந்த பிரவீனை சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அவர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதுகுறித்த புகாரின்பேரில் வைத்தீஸ்வரன்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக நத்தம் மெயின் ரோட்டை சேர்ந்த ஆரோக்கியசாமி மகன் அஜித் (வயது 27) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி பிரவீன் நேற்று மாலை பரிதாபமாக இறந்தார்.
இதனையடுத்து இந்த வழக்கை வைத்தீஸ்வரன் கோவில் போலீசார் கொலை வழக்காக மாற்றி தலைமறைவாக இருந்த சேந்தங்குடி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த நடராஜன் மகன் பிரகாஷ் (26) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story






