search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    நோயாளியிடம் செல்போன் திருடிய வாலிபர் கைது

    ஆலங்குளத்தை சேர்ந்த நோயாளியிடம் செல்போன் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நெல்லை:

    ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் உடல்நிலை சரியில்லாததால், பாளையில் உள்ள சித்த மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

    அங்கு தங்கியிருந்தபோது அவரது செல்போனை காணவில்லை. இது குறித்து அவர் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவரது செல்போனை மேலகருவப்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பால்துரை என்பவர் திருடியது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து செல்போனை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர் வேறு ஏதேனும் திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்டு உள்ளாரா என்றும் விசாரணை நடந்து வருகிறது.

    Next Story
    ×