search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பஸ் கண்ணாடி உடைப்பு
    X
    பஸ் கண்ணாடி உடைப்பு

    சின்னசேலத்தில் கல்வீசி 2 அரசு பஸ் கண்ணாடி உடைப்பு

    சின்னசேலத்தில் கல்வீசி 2 அரசு பஸ் கண்ணாடிகளை உடைத்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    சின்னசேலம்:

    சின்னசேலம் புறவழிச்சாலையில் மூங்கில்பாடி பஸ் நிறுத்தம் அருகே நேற்று முன்தினம் இரவில் 2 அரசு பஸ்கள் அடுத்தடுத்து சென்று கொண்டிருந்தது. அப்போது மர்மநபர்கள் சிலர் அந்த பஸ்களின் மீது கல்வீசி தாக்கினர். இதில் 2 பஸ்களின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதமானது. இது குறித்த தகவலின் பேரில் சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கண்ணாடிகளை உடைத்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவமாக பயணிகள் உள்ளிட்ட யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை.
    Next Story
    ×