என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

X
கோப்புபடம்
வாடகை செலுத்தாவிட்டால் கடைகளுக்கு சீல்வைப்பு - காங்கயம் நகராட்சி ஆணையர் எச்சரிக்கை
By
மாலை மலர்24 Dec 2021 9:21 AM GMT (Updated: 24 Dec 2021 9:21 AM GMT)

நகராட்சி ஆணையர் உத்தரவின்படி, மேற்கண்ட 2 கடைகளையும் நகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.
காங்கயம்:
காங்கயம் நகராட்சிக்குச் சொந்தமான கடைகளுக்கு உரிய வாடகை செலுத்தாவிட்டால் கடைகளைப் பூட்டி சீல் வைக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் அறிவிப்பு செய்திருந்தது.
இதில் காங்கயம் பேருந்து நிலையம் அருகே, தினசரி சந்தைப்பகுதியில் உள்ள ஒரு கடை ரூ.98 ஆயிரம், மற்றொரு கடை ரூ.1 லட்சத்து 52 ஆயிரம் வாடகை பாக்கி வைத்திருந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் நகராட்சி ஆணையர் உத்தரவின்படி, மேற்கண்ட 2 கடைகளையும் நகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.
இதுகுறித்து காங்கயம் நகராட்சி ஆணையர் எஸ்.வெங்கடேஸ்வரன் கூறியபோது:
காங்கயம் நகராட்சி கடைகளுக்கு நவம்பர் 2021 வரை வாடகை பாக்கி நிலுவையில் உள்ள கடைக்காரர்கள் வாடகைத் தொகையினை உடனே நகராட்சி அலுவலகத்தில் செலுத்தவும். தவறும் பட்சத்தில் கடைகளைப் பூட்டி ‘சீல்’ வைக்கப்படும், என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
