என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கீழ்பவானி வாய்க்காலில் குதித்து மில் அதிபர் தற்கொலை
Byமாலை மலர்24 Dec 2021 7:03 AM GMT (Updated: 24 Dec 2021 7:03 AM GMT)
மில் அதிபர் தற்கொலைக்கான காரணம் குறித்து சிறுவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பாரதி வீதியை சேர்ந்தவர் தியாகராஜன் (59). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் நூல் மில்லில் பொது மேலாளராக பணியாற்றி வந்தார். மேலும் திருப்பூர் மாவட்டம் அவினாசியில் செயல்படும் ஒரு நூல் மில்லில் பங்குதாரராகவும் இருந்து வந்தார்.
இந்த நிலையில் அவினாசியில் உள்ள நூல் மில் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தியாகராஜனை பங்குதாரர்கள் அழைத்து உள்ளனர். இதற்கிடையே நேற்று இரவு மில்லில் இருந்து தியாகராஜன் காரில் வீட்டிற்கு புறப்பட்டார்.
அவர் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வாய்க்கால்மேடு என்ற பகுதியில் கீழ்பவானி வாய்க்கால் கரையோரம் தனது காரை நிறுத்தி விட்டு திடீரென வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
மில்லுக்கு சென்ற தியாகராஜன் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் அவரை தொடர்பு கொண்டனர். ஆனால் அவரது போன் எடுக்கவில்லை. இதையடுத்து மில்லுக்கும் போன் செய்து கேட்டுள்ளனர். அப்போது தியாகராஜன் வீட்டிற்கு சென்று விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடினர்.
இந்நிலையில் இன்று காலை சிறுவலூர் அருகே கீழ்பவானி வாய்க்காலில் தியாகராஜன் பிணமாக மீட்கப்பட்டார். இதுபற்றி தெரிய வந்ததும் குடும்பத்தினர் அங்கு விரைந்து சென்று அவரது உடலை பார்த்து கதறி அழுதனர்.
இதுகுறித்து சிறுவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தியாகராஜன் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொழில் அதிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பாரதி வீதியை சேர்ந்தவர் தியாகராஜன் (59). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் நூல் மில்லில் பொது மேலாளராக பணியாற்றி வந்தார். மேலும் திருப்பூர் மாவட்டம் அவினாசியில் செயல்படும் ஒரு நூல் மில்லில் பங்குதாரராகவும் இருந்து வந்தார்.
இந்த நிலையில் அவினாசியில் உள்ள நூல் மில் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தியாகராஜனை பங்குதாரர்கள் அழைத்து உள்ளனர். இதற்கிடையே நேற்று இரவு மில்லில் இருந்து தியாகராஜன் காரில் வீட்டிற்கு புறப்பட்டார்.
அவர் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வாய்க்கால்மேடு என்ற பகுதியில் கீழ்பவானி வாய்க்கால் கரையோரம் தனது காரை நிறுத்தி விட்டு திடீரென வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
மில்லுக்கு சென்ற தியாகராஜன் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் அவரை தொடர்பு கொண்டனர். ஆனால் அவரது போன் எடுக்கவில்லை. இதையடுத்து மில்லுக்கும் போன் செய்து கேட்டுள்ளனர். அப்போது தியாகராஜன் வீட்டிற்கு சென்று விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடினர்.
இந்நிலையில் இன்று காலை சிறுவலூர் அருகே கீழ்பவானி வாய்க்காலில் தியாகராஜன் பிணமாக மீட்கப்பட்டார். இதுபற்றி தெரிய வந்ததும் குடும்பத்தினர் அங்கு விரைந்து சென்று அவரது உடலை பார்த்து கதறி அழுதனர்.
இதுகுறித்து சிறுவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தியாகராஜன் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொழில் அதிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X