என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

X
தாராபுரத்தில் ஜவுளிக்கடைகள் அடைக்கப்பட்டுள்ளதையும், வியாபாரிகள் ஊர்வலமாக சென்றதையும் படத்தில் காணலாம்.
தாராபுரத்தில் ஜவுளிக்கடைகள் அடைப்பு
By
மாலை மலர்23 Dec 2021 9:39 AM GMT (Updated: 23 Dec 2021 9:39 AM GMT)

சுமார் 150க்கும் மேற்பட்ட ஜவுளி கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் அப்பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.
தாராபுரம்:
ஆடைகளுக்கான ஜி.எஸ்.டி.வரி ஜனவரி 1-ந்தேதியில் இருந்து 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. இதற்கு ஆடை உற்பத்தியாளர்கள் மற்றும் ஜவுளிக்கடை வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
இந்தநிலையில் ஜி.எஸ்.டி. வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இன்று ஜவுளி கடை உரிமையாளர்கள், வியாபாரிகள் மற்றும் டெய்லர்கள் தங்களது கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 150க்கும் மேற்பட்ட ஜவுளி கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் அப்பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.
மேலும் தாராபுரம் ஜவுளிக்கடை உரிமையாளர்கள் சங்க தலைவர் சாரதாஸ் சண்முகவேல் தலைமையில் வியாபாரிகள் தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்றனர். பின்னர் ஜி.எஸ்.டி. வரியை குறைக்க கோரி கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
