என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
மாமல்லபுரத்தில் புத்தாண்டு கொண்டாட வருபவர்களுக்கு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம்
புத்தாண்டை கொண்டாட மாமல்லபுரம், கோவளம், கேளம்பாக்கம் பகுதிகளில் உள்ள ஹோட்டல், ரிசார்ட்களில் முன்பதிவு செய்துள்ள பயணிகள் முறையான ரசீதும், கொரோனா தடுப்பூசி சான்றிதழும் வைத்திருக்க வேண்டும்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தில் 2022- ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை கொண்டாட விடுதிகள், ரிசாட்டுகள் ஏற்பாடுகள் செய்து வருகின்றன. இதையொட்டி வருகிற 31-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நள்ளிரவில் மாமல்லபுரம் பகுதியில் உள்ள விடுதிகளில் தங்குவதற்கு இப்போதே ஆன்லைன் மூலம் முன்பதிவு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன், மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல்ராஜு ஆகியோர் புத்தாண்டு கொண்டாட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக மாமல்லபுரம் விடுதி, ரிசார்ட் நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
புத்தாண்டை கொண்டாட மாமல்லபுரம், கோவளம், கேளம்பாக்கம் பகுதிகளில் உள்ள ஹோட்டல், ரிசார்ட்களில் முன்பதிவு செய்துள்ள பயணிகள் முறையான ரசீதும், கொரோனா தடுப்பூசி சான்றிதழும் வைத்திருக்க வேண்டும். தடுப்பூசி சான்றிதழ் இல்லாமல் வருபவர்கள் 31-ந்தேதி மாமல்லபுரம் நுழைய முடியாது.
அவர்கள் இ.சி.ஆர் - ஓ.எம்.ஆர் வழிகளில் போலீஸ் சோதணை சாவடிகளில் திருப்பி அனுப்பப்படுவர்.
விடுதிகள், கடற்கரை ஓரம் சட்ட விரோதமாக கேளிக்கை விழாவோ, தனியார் பங்களாக்களில் ஆபாச நடனமோ, அனுமதி இல்லாத வெளிநாட்டு மது, போதை விருந்தோ நடத்தினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாமல்லபுரத்தில் 2022- ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை கொண்டாட விடுதிகள், ரிசாட்டுகள் ஏற்பாடுகள் செய்து வருகின்றன. இதையொட்டி வருகிற 31-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நள்ளிரவில் மாமல்லபுரம் பகுதியில் உள்ள விடுதிகளில் தங்குவதற்கு இப்போதே ஆன்லைன் மூலம் முன்பதிவு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன், மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல்ராஜு ஆகியோர் புத்தாண்டு கொண்டாட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக மாமல்லபுரம் விடுதி, ரிசார்ட் நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
புத்தாண்டை கொண்டாட மாமல்லபுரம், கோவளம், கேளம்பாக்கம் பகுதிகளில் உள்ள ஹோட்டல், ரிசார்ட்களில் முன்பதிவு செய்துள்ள பயணிகள் முறையான ரசீதும், கொரோனா தடுப்பூசி சான்றிதழும் வைத்திருக்க வேண்டும். தடுப்பூசி சான்றிதழ் இல்லாமல் வருபவர்கள் 31-ந்தேதி மாமல்லபுரம் நுழைய முடியாது.
அவர்கள் இ.சி.ஆர் - ஓ.எம்.ஆர் வழிகளில் போலீஸ் சோதணை சாவடிகளில் திருப்பி அனுப்பப்படுவர்.
விடுதிகள், கடற்கரை ஓரம் சட்ட விரோதமாக கேளிக்கை விழாவோ, தனியார் பங்களாக்களில் ஆபாச நடனமோ, அனுமதி இல்லாத வெளிநாட்டு மது, போதை விருந்தோ நடத்தினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story






