என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    காரியாபட்டி அருகே செல்போன் பறித்த 2 பேர் கைது

    காரியாபட்டி அருகே செல்போன் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காரியாபட்டி:

    காரியாபட்டி கே. செவல்பட்டியில் குடியிருந்து வருபவர் மாணிக்கம் (வயது 27). இவர் மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை செவல்பட்டி விலக்கு அருகே இரவு நேரத்தில் செல்போனில் பேசிக் கொண்டிருந்த போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்கள் மாணிக்கத்திடம் இருந்த செல்போனையும், கழுத்தில் கிடந்த கவரிங் செயினையும் பறித்துக்கொண்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் சென்று விட்டனர். இதுகுறித்து மாணிக்கம் அளித்த புகாரின் பேரில் காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் போலீஸ் இன்ஸ்பெக்டர் மூக்கன், சப்-இன்ஸ்பெக்டர்கள் அசோக்குமார், ஆனந்தஜோதி ஆகியோர் நடத்திய விசாரணையில் காரியாபட்டி அருகே உள்ள முடியனூர் கிராமத்தை சேர்ந்த ராக்கேஷ் (22), பெருமாள் (26) ஆகியோர் செல்போன் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
    Next Story
    ×