என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருப்பாலீஸ்வரர் கோவில் கோபுரத்தில் இருந்து விழுந்து சமூக சேவகர் பலி
Byமாலை மலர்20 Dec 2021 9:25 AM GMT
திருப்பாலைவனம் திருப்பாலீஸ்வரர் கோவில் கோபுரத்தில் இருந்து விழுந்து படுகாயமடைந்த சமூக சேவகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த டி.வி.புரம் ராஜீவ் காந்தி தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது45). சமூக சேவகர். இவர் பொன்னேரியை அடுத்த திருப்பாலைவனத்தில் உள்ள பழமை வாய்ந்த திருப்பாலீஸ்வரர் கோவில் கோபுரத்தில் உள்ள செடி கொடிகளை அகற்றி உழவாரப்பணி செய்து கொண்டிருந்தார்.
அப்போது திடீரென ரமேஷ் கால் தவறி கோபுரத்தில் இருந்து கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை பொன்னேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ரமேஷ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருப்பாலைவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான ரமேசுக்கு, கிரிஜா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
பொன்னேரி அடுத்த டி.வி.புரம் ராஜீவ் காந்தி தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது45). சமூக சேவகர். இவர் பொன்னேரியை அடுத்த திருப்பாலைவனத்தில் உள்ள பழமை வாய்ந்த திருப்பாலீஸ்வரர் கோவில் கோபுரத்தில் உள்ள செடி கொடிகளை அகற்றி உழவாரப்பணி செய்து கொண்டிருந்தார்.
அப்போது திடீரென ரமேஷ் கால் தவறி கோபுரத்தில் இருந்து கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை பொன்னேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ரமேஷ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருப்பாலைவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான ரமேசுக்கு, கிரிஜா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X